எழில் அமிர்தா காதலுக்கு எமனாய் வந்த வர்ஷினி.. உறுதுணையாக நிற்கும் பாக்கியா – லேட்டஸ்ட் அப்டேட்!

0
எழில் அமிர்தா காதலுக்கு எமனாய் வந்த வர்ஷினி.. உறுதுணையாக நிற்கும் பாக்கியா - லேட்டஸ்ட் அப்டேட்!
எழில் அமிர்தா காதலுக்கு எமனாய் வந்த வர்ஷினி.. உறுதுணையாக நிற்கும் பாக்கியா - லேட்டஸ்ட் அப்டேட்!
எழில் அமிர்தா காதலுக்கு எமனாய் வந்த வர்ஷினி.. உறுதுணையாக நிற்கும் பாக்கியா – லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா இடையே வர்ஷினி தன்னுடைய வேலையை காட்டி வருகிறார். அதனால் எழிலை அமிர்தா தவிர்த்து வர, அதை நினைத்து எழில் மிகவும் வருத்தப்படுகிறார். அதை பார்த்து பாக்கியா ஆறுதல் சொல்ல அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

“பாக்கியலட்சுமி” சீரியலில், எழிலை ப்ரொடியூசர் மகள் வர்ஷினி ஒருதலையாக காதலித்து வருகிறார். இது பற்றி எழிலிடம் சொல்ல ஆனால் எழில் நான் அமிர்தாவை காதலிக்கிறேன் என வெளிப்படையாக சொல்கிறார். ஆனாலும் வர்ஷினி எழிலை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்கிறார். முதலில் எழில் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறார். அதற்காக அவர் பல பொருள்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று நல்லவிதமாக நடந்து கொள்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

அதனால் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் வர்ஷினி நல்ல பெண் எழிலிற்கு பொருத்தமாக இருப்பாள் என நினைக்கின்றனர். மறுபக்கம் அமிர்தா வீட்டிற்கு சென்ற வர்ஷினி அமிர்தா அம்மா அப்பாவிடம், நான் எழிலை திருமணம் செய்ய இருக்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு அமிர்தாவின் அம்மா அப்பா இனிமேல் எழிலிடம் பழக வேண்டாம் என எச்சரிக்கின்றனர். அதை காரணமாக வைத்து எழிலை அமிர்தா தவிர்க்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனிக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா – வைரலாகும் Family புகைப்படம்!

எழில் போன் செய்ய ஆனால் அமிர்தா போனை எடுக்கவில்லை. அதனால் எழில் அமிர்தாவை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் அமிர்தாவும் எழிலிடம் இப்படி நடந்து கொள்வதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் எழில் அழுவதை பார்த்து பாக்கியா என்னாச்சு என கேட்கிறார். பாக்கியாவை கட்டி அணைத்து எழில் அழ, நடந்ததை சொல்கிறார். பின் உன் நிலைமை இப்படி இருக்கிறது நான் எப்படி வீட்டில் பேச முடியும் என கேட்க, பாக்கியா அவங்க ஏன் அவரசப்படுகிறார்கள் என கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

என் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது, நான் அமிர்தாவை தவிர யாரை நினைப்பேன் என எழில் கேட்க, எல்லாம் சரியாகிவிடும் என பாக்கியா சொல்கிறார். நீ போவது பிடிக்கவில்லை என்றால் நீ போகாதே.. நான் இருக்கேன் எவ்வளவு நாள் ஆனாலும் சரி நீங்க இருவரும் ஒன்று சேருவிங்க என பாக்கியா சொல்ல, என் மீது நம்பிக்கை போக என்ன காரணம் என தெரியவில்லை என எழில் புலம்புகிறார். எல்லாம் சரியாகிவிடும் என பாக்கியா எழிலிற்கு ஆறுதல் சொல்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!