இனியா தவறு செய்ததை கண்டுபிடித்த பாக்கியா.. கண்டித்த குடும்பம்.. கேள்வி கேட்க வரும் கோபி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிடம் டீச்சர் விவரத்தை சொல்ல, அவர் இனியா மீது பயங்கர கோவத்தில் இருக்கிறார். பின் வீட்டிற்கு அழைத்து வந்து எல்லாரிடமும் உண்மையை சொல்ல, ஈஸ்வரி கோவப்பட்டு இனியாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிடம் டீச்சர் இனியா பற்றி சொல்ல, அவள் அப்பா வந்ததாக சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இனியா அப்பா உங்களிடம் சொல்லவில்லையா என கேட்க, உடனே பாக்கியா அவர் ஆபிசில் இருந்து வந்திருப்பார் என சொல்கிறார். பின் பாக்கியா இனியாவிற்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா வர, ஏன் அம்மா நீ வந்திருக்கிறாய் என கேட்கிறார். அப்போது பாக்கியா டீச்சர் பேரன்ட்ஸ் கூட்டிக் கொண்டு வர சொன்னார்களா என கேட்க, இனியா தவறு செய்ததாக நினைக்கிறார். உன் அப்பாவை வர சொன்னியா என கேட்க, இனியா ஆமாம் என சொல்கிறாள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இங்கே வைத்து பேச வேண்டாம் என பாக்கியா இனியாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அங்கே செழியன் எழில் இனியா பாட்டி தாத்தா என அனைவரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா வர நீ எதற்கு ஸ்கூலிற்கு போனாய் என ஈஸ்வரி கேட்கிறார். அப்போது பாக்கியா கோவமாக நீங்களே நியாயத்தை கேளுங்க என சொல்கிறார். அப்போது ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்க, இவள் ஸ்கூலில் நண்பர்களுடன் சேர்ந்து போன் பார்த்து மாட்டிக் கொண்டாள், நிகிலா அம்மா போன் செய்து நீங்க வரவில்லையா என கேட்ட பின் தான் எனக்கு விவரம் தெரிய வருகிறது.
ஆனால் இவள் நம்மளிடம் சொல்லாமல் அவளுடைய அப்பாவை வர வைத்து இருப்பதாக சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அவனை எதற்கு வர சொன்னாய் என ஈஸ்வரி கேட்க, இனியா எனக்கு உங்களிடம் சொல்ல பயமாக இருந்ததாக சொல்கிறார். உடனே பாக்கியா இவளுக்கு வீட்டில் என்ன குறை வைத்தோம் என கேட்க, உடனே தாத்தா அவன் நல்ல அப்பா என நினைத்து அவனை கூப்பிட்டாயா என கேட்கிறார். பின் எழில் என்னிடம் சொல்லி இருக்கலாமே என கேட்க, ஆனால் இனியா உன்னை எப்படி கூட்டிக் கொண்டு போக முடியும் என கேட்கிறார்.
தொழில்நுட்ப துறையில் நேர்ந்து வரும் அடுத்தடுத்த சம்பவங்கள் -LinkedIn நிறுவனத்தின் அதிரடி முடிவு!
பாக்கியாவிற்கு பயங்கர கோவம் வர இனியாவை அடித்துவிடுகிறார். உடனே எழில் அடிக்காதே அம்மா இனிமேல் இப்படி செய்யமாட்டாள் என சொல்ல, ஈஸ்வரி அவன் நல்ல அப்பா என அவனை தேடி செல்கிறாய் எவ்வளவு தைரியம் என கேட்கிறார். உடனே இனியா எனக்கு பயமாக இருந்ததாக சொல்ல, பாக்கியா உனக்கு என்ன வயசு ஆகிறது என கேட்டு சத்தம் போடுகிறார். இப்படி வீடு இருந்தால் நான் எப்படி சொல்வேன் என இனியா கேட்க, ஈஸ்வரி உனக்கு அவன் தான் முக்கியம் என்றால் இந்த வீட்டில் இருக்காதே என் சொல்கிறார். உடனே இனியா வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அப்போது அந்த பக்கமாக கோபி வர இனியா என்னை எல்லாரும் அடிப்பதாக சொல்கிறார். எழில் இனியாவை சமாதானம் செய்ய கோபி நான் வந்து கேட்கிறேன் என சொல்லி இனியாவை அழைத்து கொண்டு வீட்டிற்குள் வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.