தொழில்நுட்ப துறையில் நேர்ந்து வரும் அடுத்தடுத்த சம்பவங்கள் -LinkedIn நிறுவனத்தின் அதிரடி முடிவு!
லிங்க்ட்இன் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாக உள்ள நிலையில், தற்போது பொருளாதார சிக்கல்களை தவிர்ப்பதற்காக புதிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
லிங்க்ட்இன் நிறுவனம்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த லிங்க்ட்இன் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கான வசதியையும், தேவையான ஊழியர்களை நிறுவனங்கள் தேடுவதற்கும் உதவியாக இருந்து வருகிறது. சமீப காலமாக தொழில்நுட்ப உலகம் முழுவதும் அதிரடியாக பணியாளர் நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் – மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்.. இதோ!
தற்போதுள்ள பொருளாதார நிலையை ஈடு செய்வதற்காக தான் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவங்களில் நடந்துள்ள பணியாளர் நீக்க எண்ணிக்கை அனைவரையும் சற்று அதிர்ச்சியாக்கும் அளவில் தான் உள்ளது. இந்நிலையில், லிங்க்ட்இன் நிறுவனம் தற்போது புதிய ஊழியர்களை நியமிக்கும் திட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
மேலும், லிங்க்ட்இன் நிறுவனத்திலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு, நிறுவனம் ஊழியர்கள் தங்களின் வாழ்வில் அடுத்த கட்டத்தை, உயர வேண்டிய நிலையை சந்திக்கும் வாய்ப்பாக இது அமையும் என்று பதில் அளித்துள்ளது.