ராதிகாவை நேருக்கு நேராக கேள்வி கேட்ட இனியா, கடுப்பான கோபி – பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

0
ராதிகாவை நேருக்கு நேராக கேள்வி கேட்ட இனியா, கடுப்பான கோபி - பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
ராதிகாவை நேருக்கு நேராக கேள்வி கேட்ட இனியா, கடுப்பான கோபி - பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
ராதிகாவை நேருக்கு நேராக கேள்வி கேட்ட இனியா, கடுப்பான கோபி – பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எதை செய்தாலும் குறை சொல்லும் குடும்பத்தினர், தற்போது கோபி செய்த தவறுக்கும் பாக்கியா தான் காரணம் என்று சொல்லுகின்றனர். இந்நிலையில், இனியா மீது அதிக பாசம் வைத்திருக்கும் கோபி, தற்போது இனியா செய்த காரியத்தால் கோவம் அடைகிறார்.

கோவத்தில் கோபி:

ராதிகாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கோபி பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வந்தார். குடும்பத்தில் ராமமூர்த்தி தாத்தா, எழில் மற்றும் செல்வி என்று யாரிடமாவது மாட்டினாலும் அதை எப்படியாவது சமாளித்து வந்தார். பாக்கியாவும் யார் கோபியை பற்றி சொன்னாலும், அதை நம்பாமல் இருந்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தன் கண்களால் நேரடியாக பார்த்த பிறகு தான் கோபியின் உண்மையான சுயரூபம் பாக்கியாவிற்கு புரிந்தது.

அதன்பிறகு, கோபி ஆசைப்பட்டது போல் விவாகரத்து கொடுக்க சம்மதம் என்று கோர்ட்டில் பாக்கியா கூறியதால், நீதிபதியும் இவர்கள் கேட்ட விவகாரத்தை பாக்கியாவிற்கு கொடுத்து விட்டார். ஆனால், அதன்பிறகு பாக்கியா தன் வீட்டில் இருக்க கூடாது என்று கோபி சொல்ல, ஆனால் பாக்கியா யாரும் எதிர்பார்க்காத வகையில் கோபியை வேறு அறைக்கு போக சொல்லுகிறார். ஆனால், இது தான் நல்ல வாய்ப்பு என்று கோபி வீட்டை விட்டே சென்று விட்டார். இதற்கு பாக்கியா தான் கரணம் என்று குடும்பத்தினர் பாக்கியாவை திட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எப்போது? நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

இந்நிலையில், கோபி இனியாவின் பள்ளியில் வைத்து ராதிகாவிடம் பேசியதை இனியா பார்த்து விடுகிறார். இதனால் இனியா ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். எங்க அப்பா மயக்கு பணம் கட்ட தான ஸ்கூலிற்கு வந்தார் என்று கேட்கிறார், உடனே, ராதிகா இல்லை உன் அப்பா உனக்காக தான் வந்தார் என்று சொல்கிறார். எங்க அப்பா பிரிஞ்சுட்டாங்க, அதனால நீங்க எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கலாம் என்று நினைசீங்களா? அப்படி தான எங்க அப்பா கிட்ட பேசிட்டு இருந்தீங்க என்று கேட்கிறார்.

இதன் பிறகு தான் ராதிகாவும், நாம் அவர்களை ஒன்று சேர்க்க நினைக்காமல், கோபியை ஏற்றுக் கொள்ள தயாராகிட்டோமே என்று நினைத்து வருத்தப்படுகிறார். இதனால் கோபி ராதிகாவை கஷ்டப்பட்டு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தால், இனியா அதை கெடுத்து விட்டதாக நினைத்து கோவம் அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!