பாக்கியலட்சுமி கோபியின் நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமா – எதிரிக்கும் வர கூடாது!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கொடூரமான வில்லனாக கோபி கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சதீஸ். அவர் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகர் சதீஸ்:
சின்னத்திரையில் டாப் சீரியல் வரிசையில் இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் வெற்றிக்கு மூலக் காரணமே கோபி கதாபாத்திரம் தான். கொடூரமான வில்லனாக காட்டப்படும் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஸ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் நவரசத்தையும் முகத்தில் காட்டி நடிக்கும் அவருக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு வில்லனுக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யப்படும் அளவிற்கு கோபி கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு இருக்கிறது.
இந்தியாவில் நவம்பர் மாத GST வருவாய் உயர்வு – ரூ.1,45,867 லட்சம் கோடி வசூல்.. மத்திய அரசு தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபியாக தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து வரும் நடிகர் சதீஸ் வாழ்க்கையில் பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அவரின் 5வது வயதில் பெற்றோர்களை இழந்ததாக வருத்தத்துடன் விளக்கம் அளித்து இருக்கிறார். அதனால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பார்த்தால் தனக்கு தனி அக்கறை வரும்.. அவர்களின் வலி எனக்கு தெரியும் என ஒரு பேட்டி ஒன்றில் சதீஸ் சொல்லி இருக்கிறார். இவ்வளவு பிரபலமான நடிகர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா என ரசிகர்கள் இந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.