கோபியின் பொய்களை கண்டுபிடித்த தனம் மூர்த்தி, கோவப்பட்டு சத்தம் போடும் கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
கோபியின் பொய்களை கண்டுபிடித்த தனம் மூர்த்தி, கோவப்பட்டு சத்தம் போடும் கோபி - இன்றைய
கோபியின் பொய்களை கண்டுபிடித்த தனம் மூர்த்தி, கோவப்பட்டு சத்தம் போடும் கோபி - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
கோபியின் பொய்களை கண்டுபிடித்த தனம் மூர்த்தி, கோவப்பட்டு சத்தம் போடும் கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “மகா சங்கமம்” சீரியலில், கோபி ராதிகா பழக்கம் இருக்கிறதா என தெரிந்து கொள்ள மூர்த்தியும் தனமும் ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே கோபியின் புகைப்படத்தை ராதிகா காட்ட அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கியது தெரிந்து மூர்த்தி கோபியிடம் கோவமாக பேசுகிறார். ஆனால் கோபி இதை கேட்க நீ யார் என கோவமாக பேசிவிடுகிறார்.

மகா சங்கமம்:

இன்று “மகா சங்கமம்” சீரியலில், கோபிக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் இருப்பதை தெரிந்து எழில் வருத்தப்பட்டு பேசியதாக கதிர் சொல்கிறார். அதனை தொடர்ந்து ராதிகா மீது சந்தேகம் வர மூர்த்தியும் தனமும் ராதிகா வீட்டிற்கு செல்கிறார்கள். அப்போது ராதிகா அவர்களை சொந்தங்கள் போல வரவேற்று பேசுகிறார். பின் ராதிகா வீட்டில் இருக்க நீங்க திருமணம் செய்ய இருப்பவர் உங்களுக்கு தெரிந்தவரா என கேட்கிறார். ஆமாம் அவரை ரொம்ப வருசமாக தெரியும் என ராதிகா சொல்ல, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறதா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆமாம் திருமணம் முடிந்தவர் தான் எனக்கு விவாகரத்து முடிந்துவிட்டது. ஆனால் அவருக்கு விவாகரத்து ஆகவில்லை பதிவு செய்து இருக்கிறார் என சொல்கிறார். பின் மூர்த்தி போட்டோ இருக்கிறதா என கேட்க ராதிகா போட்டோவை காட்டுகிறார். கோபியை பார்த்து மூர்த்தி தனம் அதிர்ச்சி அடைகின்றனர். பின் மயூராவிற்கு அவரை மிகவும் பிடித்துள்ளது என சொல்கிறார். மூர்த்தி தனம் என்ன சொல்வது என தெரியாமல் கிளம்பி விடுகின்றனர். பின் தனம் பாக்கியாவிடம் பேசுகிறார்.

அண்ணனிற்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி இருக்கிறார் என கேட்க, அவருக்கு முதலில் இருந்தே என்னை பிடிக்காது இப்போ சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போது தான் செழியனும் எழிலும் பெரியவர்களாக மாறிவிட்டார்களே அப்பறம் என்ன என சொல்கிறார். இவர் இப்படி இருப்பதை பார்த்து எழில் விவாகரத்து வாங்க சொல்வான் ஆனால் அதெல்லாம் சரியாக வராது என சொல்கிறார். ஒரு நாள் இவர் என்னை கோர்ட்டிற்கு அழைத்து சென்றார் என சொல்ல, ஏன் என தனம் கேட்கிறார். எதோ ஆபிஸ் வேலை என்று சொன்னார். அங்கே எல்லாரும் விவாகரத்து வாங்க வந்தார்கள்.

என்னால் அதெல்லாம் பார்க்கவே முடியவில்லை என சொல்கிறார். அப்போது தனத்திற்கு பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கியது தெரிகிறது. பின் மூர்த்தி தனமும் பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகின்றனர். எல்லாரும் ஊருக்கு கிளம்ப ராமமூர்த்தி அதை நினைத்து வருத்தப்படுகிறார். விடுமுறை என்றால் நீங்க எல்லாரும் வாங்க என சொல்ல இனியா அழவே தொடங்கிவிட்டார். அப்போது கோபி வர கிளம்பிடீங்களா பார்த்து கிளம்புங்கள் என சொல்கிறார். அப்போது மூர்த்தி கடை பற்றி பேச வேண்டும் என சொல்லி கோபியை ரூமிற்கு அழைத்து செல்கிறார்.

லட்சுமி மீது பாசத்தை காட்டும் பாரதியின் குடும்பம், உண்மையை தெளிவுபடுத்திய சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது என்ன உதவி வேண்டும் என கோபி கேட்க அதெல்லாம் இல்லை. நீங்க இப்படி பாக்கியாவை ஏமாற்றுவது சரியாக இருக்கிறதா என மூர்த்தி கேட்கிறார். நான் என்ன ஏமாற்றுகிறேன் என கேட்க எனக்கு எல்லாம் தெரியும் ராதிகா உங்களது போட்டோ உடன் காட்டிவிட்டார் என சொல்ல கோபி கோவப்பட்டு நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன் அதை கேட்க நீங்க யார் என கேட்கிறார். பின் கோபியை இந்த குடும்பத்திற்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன ஆகும் என கேட்க, நான் இத்தனை வருசமாக இந்த குடும்பத்திற்கு உழைத்து போட்டிருக்கேன் இப்போது பசங்க பெரியவர்களாக மாறிவிட்டார்கள் என் சந்தோசம் எனக்கு முக்கியம் என சொல்கிறார். பின் கோபியை பார்த்து உங்களுக்கு இப்படி செய்ய அசிங்கமாக இல்லையா என கேட்க, என்னுடைய இஷ்டம் அதை கேட்க நீ யார் உனக்கு அவ்வளவு தான் மரியாதை என கோபி சொல்ல கோபி சத்தம் போடுவதை கேட்டு வெளியே இருந்து அனைவரும் வந்து கதவை தட்டுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!