விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் சிபி? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வார வெளியேற்றத்திற்காக நடத்தப்பட்டு வரும் வோட்டிங்கில், மிக குறைந்த வாக்குகளை பெற்றிருக்கும் போட்டியாளர் சிபி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் சிபி
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், ஸ்வாரசியமாகவும் வெளியாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. எப்போதும் போல 18 போட்டியாளர்களுடன் களம் கண்டு வந்த இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு, தற்போது 10 பேர் மட்டுமே போட்டிகளில் இடம் பிடித்து வருகின்றனர். இதில் 2 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் அடக்கம். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 80 நாட்களை கடந்திருப்பதால் போட்டிகள் அனைத்தும் சற்று கடுமையாகி கொண்டே இருக்கிறது.
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்றே கடைசி நாள்!
இதற்கு மத்தியில் ஒவ்வொரு வாரமும் தவறாது நடைபெற்று வரும் எவிக்ஷன் ப்ராசஸின் படி இந்த வாரம் ப்ரியங்கா, பாவனி, நிரூப், சிபி, அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் வெளியேற்றத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் உள்ள அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ட்ராங் ஆன போட்டியாளர்களாக இருப்பதால் இதில் யார் வெளியேற வாய்ப்புகள் இருக்கிறது என்று சற்று நிதானிக்க முடியாததாக இருக்கிறது. என்றாலும் இதுவரை வெளிவந்துள்ள தகவலின் படி, வருண் மற்றும் சிபி ஆகியோர் தான் குறைந்தபட்ச வாக்குகளை பெற்று கடைசி இடங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!
அதுவும் சிபி தான் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதால் அவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 3 எவிக்ஷன் ப்ராசஸிலும் மிக குறைந்த வாக்குகளை பெற்று வரும் சிபி இந்த வாரமும் அதே போன்ற நிலையை தொடருவதால் சிபி தான் ‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக தெரிகிறது. என்றாலும் இந்த தகவல் சிபி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.