அக்.4 முதல் 7 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது வேலுார் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டமாக இம்மாதத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதனால் தேர்தல் ஒழுங்கு நடவடிக்கையாக அம்மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (அக்.4) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதில், உள்ளாட்சி தேர்தலையொட்டி, வரும் 4 ம் தேதி காலை 10:00 மணி முதல் 9 ம் தேதி இரவு 12:00 மணி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நாளான 12 ம் தேதி முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில், பார்கள் தற்காலிகமாக மூட வேண்டும் எனவும், அங்கு மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல கூடாது எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்பட தவறினால் டாஸ்மாக் விற்பைனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
WIPRO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – பட்டதாரிகளுக்கு அழைப்பு!
நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களில் மது விற்பனை செய்வதாக தெரியவந்தால், அதன் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டத்திலும் 7 நாட்கள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.