தமிழகத்தில் சிறைத்துறையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே!
தமிழகத்தில் சிறைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
வேலைவாய்ப்பு
வேலூர் மத்திய சிறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முடி திருந்துநர்(Barber), இரவு காவலர் (Night watchmen) உள்ளிட்ட பணியிடங்களில் காலியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எழுத, படிக்க தெரிந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்கள் செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வுகள் வேலூர் மத்திய சிறையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சாதிச்சான்று, கல்விச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூ.30க்கான அஞ்சல் வில்லை கொண்ட சுயமுகவரியிட்ட உறை உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பத்தை வருகிற 20ம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை சிறைக் கண்காணிப் பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்க்ள.