இறுதி கட்டத்தை எட்டியுள்ள தமிழக மாநில கல்வி கொள்கை – வரைவு அறிக்கை விரைவில் வெளியீடு!
தமிழகத்தில் புதிய மாநில கல்வி கொள்கையானது தயாரிக்கப்பட்டு அதற்கான இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வரைவு அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மாநில கல்வி கொள்கை:
நாடு முழுவதும் மத்திய அரசின் “புதிய தேசிய கல்வி கொள்கை” அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் புதிய தேசிய கல்வி கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்த தொடங்கி விட்டது. மற்ற மாநிலங்களிலும் இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றது. ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தேசிய கல்வி கொள்கையினை ஆதரிக்க வில்லை என்று அறிவித்துள்ளது.
தங்கம் வாங்குவது இனி கனவு தான் போல.. அனைவரையும் அதிர்ச்சி ஆக்கிய இன்றைய விலை நிலவரம்!
Exams Daily Mobile App Download
இதனால் தமிழகத்தில் புதிதாக மாநில கல்வி கொள்கை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் புதிய கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்பை முடித்துள்ளனர். அதன்படி, முக்கிய அம்சங்கள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவருகின்றது. மேலும், கல்வித்துறையில் உள்ளவர்களிடமும் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு, அறிக்கையானது அடுத்த மாதம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.