விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ‘வேலைக்காரன்’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் 400 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்காரன் சீரியல் அடுத்த வாரத்திலிருந்து நிறைவடைவதாகவும், செல்லம்மா என்கிற புது சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வேலைக்காரன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வேலைக்காரன் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது வேலன் கதாபாத்திரத்தில் சபரியும், வள்ளி கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியாவும், விசாலாட்சி கதாபாத்திரத்தில் மலையாள பிரபல நடிகையான சோனா நாயரும், ராகவன் கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்து வருகிறார்கள்.
வேலைக்காரன் சீரியல் அப்படியே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தின் கதையை தான் மாற்றி வேலைக்காரனாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசான வேலன் வேலைக்காரனாக அறிமுகமாகிறார். பின்பு ராகவன் வேலன் தான் குடும்பத்தின் உண்மையான வாரிசு என்பதை தெரிந்த பிறகு அவனுக்காக பல உதவிகளை செய்கிறார். ஆரம்பத்தில் வேலன் தான் வள்ளியை காதலித்து கொண்டிருக்கிறார். பின்பு ராகவனும் வள்ளியை காதலிக்கும் விஷயம் தெரிந்து ராகவனுக்காக வள்ளியை விட்டுக் கொடுக்கிறார்.
Exams Daily Mobile App Download
பின்பு வள்ளியும் வேலனை தான் விரும்பி கொண்டிருக்கிறார் என்கிற விஷயம் வேலனுக்கு தெரியவந்த பிறகு வேலனுடன் வள்ளியை சேர்த்து வைக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் வேலைக்காரன் சீரியல் அடுத்த வாரத்திலிருந்து முடிவடைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை வேலைக்காரன் சீரியல் 400 எபிசோடுகளை கடந்து விட்டது. ஆனால் வேலைக்காரன் சீரியல் முடிவடைய போவதற்கான எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் புதிதாக செல்லம்மா என்கிற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. உண்மையாகவே வேலைக்காரன் சீரியல் முடிவடைய தான் போகிறதா அல்லது வேலைக்காரன் சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்றி இருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.