விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் மீண்டும் மீண்டும் பாரதி பழைய கதையை பேசுவதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் வருண் என்ட்ரி இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டாலும் சீரியலின் கதையால் TRPயில் எந்த மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வாரந்தோறும் இறுதியில் ட்விஸ்ட் வைத்து முடித்தாலும், அடுத்த வாரம் முழுவதும் அந்த திருப்பத்தை கொண்டுவராமல் கடைசியில் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக பழைய கதையே வருவதால் அதிருப்தியில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!
அதனால் எதாவது ஒரு உண்மை பாரதிக்கு தெரியவர வேண்டும். சீரியல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில் அடுத்த வாரம் வருண் என்ட்ரி இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. கண்ணம்மா பிறந்தநாளில் பாரதி தான் லக்ஷ்மியின் அப்பா என்ற உண்மை சொல்லுவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. பதிலுக்கு பாரதி கண்ணம்மா மீது வைத்திருக்கும் பாசம் வெளியாகி இருக்கிறது.
ஜீ தமிழ் “சத்யா” சீரியலில் இருந்து விலகும் அமுல் பேபி விஷ்ணு? ரசிகர்கள் ஷாக்!
வருண் எண்ட்ரியால் சீரியல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என தெரிய வந்துள்ளது. பாரதியிடம் வருண் வந்து உண்மையை சொன்னாலும் பாரதி ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால் எப்படி கதை கொண்டு செல்லப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும் வருண் எண்ட்ரியால் கதையில் மாற்றம் கண்டிப்பாக வரும் என்பதால் ரசிகர்கள் அடுத்த வார எபிசோடுகளை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.