தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) பொதுக்குழு கூட்டம் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) பொதுக்குழு கூட்டம் - முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) பொதுக்குழு கூட்டம் - முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) பொதுக்குழு கூட்டம் – முக்கிய அறிவிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் நாளை (20.11.2021) நடைபெற இருந்த கிராம நிர்வாக சங்கத்தினரின் மாநில பொதுக்குழு அவசரக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒத்திவைப்பு:

தமிழகத்தில் அரசு துறைகளில் அந்தந்த துறை வாரியாக பணிபுரியும் ஊழியர்களை கொண்டு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவை மாவட்ட வாரியாகவும், மாநில குழுவாகவும் உள்ளது. அந்தந்த துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குழுவாக சேர்ந்து தங்கள் துறைகளில் உள்ள நிறை, குறைகளை அரசிடம் கோரிக்கை வைத்தும் கலந்துரையாடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நிவர்த்தி செய்து வருகின்றனர். அண்மையில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் பொதுக்குழு கூட்டம் நடத்தி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 பரிசுடன் ‘கவிமணி விருது’ – டிச.31ம் தேதி கடைசி நாள்!

இந்த நிலையில் நாளை (நவ.20) தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கத்தினரின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால் மழை வெள்ள பணிகளில் தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருப்பதால் நாளை கோவையில் நடைபெறவிருந்த விஏஓ அவசர கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநில தலைவர் அறிவித்துள்ளார். இன்று வேதாரண்யத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில வட்டார சங்க நிர்வாகிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜேந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கனமழையால் சாலைகள் மூடல்!

இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2018ம் ஆண்டு ஜியோ ஜாக்டோ அமைப்புடன் இணைந்து போராடிய கிராம நிர்வாக அலுவலர்களின் பிடித்த செய்யப்பட்ட 18 நாள் சம்பளத்தை அரசு வழங்க வேண்டும். கிராம நிர்வாக பணிக்கான கல்வித்தகுதியை உயர்த்த வேண்டும். பணி செய்யும் இடத்தில் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்ப்படுத்திட வேண்டும். அரசின் முக்கிய சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான செலவுத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவர்களின் மாநிலத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!