திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கனமழையால் சாலைகள் மூடல்!
தொடர் கனமழையின் காரணமாக திருப்பதியில் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் சாலை மற்றும் நடைபாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் கனமழை:
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து திருப்பதி திருமலையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேங்கி வரும் மழை வெள்ளத்தினால் கோவிலை ஒட்டிய தெருக்கள், கடைகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன. கோவிலின் முன்புறத்திலும் கோவிலின் அருகிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவது குறிப்பிடத்தக்கது. திருமலை நம்பி சன்னதியிலும் அதிகமாக ஓடும் தண்ணீர் ஆறு போல் காட்சியளிக்கிறதாக கூறப்படுகிறது. கனமழையின் தாக்கத்தால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்தை அடைகின்றனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான 2 திட்டங்கள் அறிமுகம் – மிஸ் பண்ணாம படிங்க!
இந்நிலையில் தொடர் கனமழையின் தாக்கத்தால் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் சாலை மற்றும் நடைபாதை தற்காலிகமாக மூடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள் நிலச்சரிவு மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விரைவில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.