வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டம் தொடக்கம் – பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காந்தி நகர் ரயில் நிலையத்தில் மும்பை நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
காந்திநகர் – மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையான இன்று (30-09-2022) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மேலும் அவர் தனது குஜராத் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். காந்திநகர் தலைநகர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணியளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு, காந்திநகரில் இருந்து அகமதாபாத்தில் உள்ள கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்கிறார். கலுபூர் ரயில் நிலையத்தில் இருந்து, 12,925 கோடி ரூபாய் செலவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகமதாபாத் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார் என்று மாநில அரசு முன்னதாக அறிவித்து இருந்தது.
ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு – ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும், வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரல் மற்றும் காந்திநகர் நிலையங்களுக்கு இடையே வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு காந்தி நகரை சென்றடையும். பல வசதிகளை உள்ளடக்கிய இந்த ரயிலில் ஸ்லைடிங் கதவுகள், தனிப்பயனாக்கப்பட்ட ரீடிங் விளக்குகள், மொபைல் சார்ஜிங் வசதி, பயோ-டாய்லெட்கள், தானியங்கி நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் வசதியான இருக்கைகள் போன்ற பல வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்