ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு – ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் வீட்டு கடன், வாகன கடன் பெற்று உள்ளோர்க்கு வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதம் :
இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார சரிவு ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நேரத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நிலவும் பண வீக்கத்தை பொறுத்து ஆண்டுதோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது.
இதனையடுத்து மொத்த வட்டி விகிதம் 4.40% ஆக அதிகரித்தது. இதனால் வங்கிகளில் கடன் பெற்றோர்களின் வட்டி விகிதமானது அதிகரித்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு தற்போது 5.4 சதவீதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.4 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும்.
TET, TNPSC, SSC தேர்வுக்கான Free Online Mock Test – உடனே Register பண்ணுங்க!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதம் குறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது. அதனை தொடர்ந்து SDF விகிதம் 5.65% ஆகவும், MSF விகிதம் 6.15% ஆக உயர்ந்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 6.7% ஆக இருக்கலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்