அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு – ஜூலை 1க்குள் தடுப்பூசி கட்டாயம்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளர்.
அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதாவது கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட மற்ற அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொழில்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஜூன் 20 முதல் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலக பணியாளர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘புதுச்சேரியில் ஜூன் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அதனால் இப்பணிகள் ஜூன் 21 வரை நீட்டிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் முக்கியமாக அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு யோகா பயிற்சி சிறந்த மருந்தாக கருதப்படுவதால், மக்கள் அதில் ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை தாக்கம் உருவாகும் என கூறப்பட்டுள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.