தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஜூன் 20 முதல் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் பயணிகள் வருகை குறைந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்ததால் அரசு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களும் கொரோனா தொற்று அச்சத்தால் பயணங்களை தவிர்த்து வீடுகளில் முடங்கினர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அரசு கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தி வருகிறது.
ஆதார் அட்டை முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள்!
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் தங்கள் மாவட்டத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தது. நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் ரயில் பயணத்தை தவிர்த்தனர். அதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் இல்லாமல் இயங்குவதால் ரயில்வே துறை வருவாய் இழப்பை சந்திப்பதாக அதிகரிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்களின் சேவை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி செல்லும் 4 சிறப்பு ரயில்கள் நாளை இயங்க உள்ளது அதே போல், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், ஆலப்புழா, மேட்டுப்பாளையம் செல்லும் 3 சிறப்பு ரயில்களும் நாளை புறப்பட உள்ளன. மேலும், கோவையில் இருந்து நாகர்கோவில், மதுரையில் இருந்து புனலூர் செல்லும் சிறப்பு ரயில்களும், திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயிலும் நாளை முதல் சேவையை தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.