தமிழகத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!
தமிழகத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!
தமிழகத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இனி வர உள்ள அனைத்து ஞாயிறு கிழமைகளிலும் கடந்த வாரம் நடந்தது போல் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பூசி முகாம்:

தமிழகத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 12ம் தேதி அன்று அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 20 லட்சம் தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்த அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதை விடவும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் இதேபோல், தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 6 அடி பத்தாது – ஆய்வு முடிவு!

அதில், கடந்த வாரம் தமிழகம் முழுவதும் உள்ள 18 வயதிற்கு மேல் உள்ள தகுதியானவர்கள் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறித்து பாராட்டி உள்ளார். தமிழக மக்கள் தொகையில் 53 % மக்கள் முதல் டோஸ் மற்றும் 15 % மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுள்ளோர் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் வரையில் இனி வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும், முகாம் நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12ம் தேதி நடத்தப்பட்ட முகாமின் போது கடைப்பிடிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசி முகாம் தொடர வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் செப்டம்பர் 17ம் தேதி மாலை 6 மணிக்கு வீடியோ மூலம் கலந்தாலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும், அதன்படி, செப்டம்பர் 19 ம் தேதி ஞாயிற்று கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!