கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 6 அடி பத்தாது – ஆய்வு முடிவு!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வெளியான வைரஸ் நிறைந்த துகள்கள் எவ்வாறு கடந்து செல்கிறது என்பது குறித்து ஆராய தொடங்கியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
2019ம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. கொரோனா பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என கூறப்பட்டது. மேலும் முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முதலியன மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம் என கூறப்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக போலீசாரை ஈடுபடுத்தக் கூடாது – EPS வலியுறுத்தல்!
இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூச்சு காற்றில் இருந்து வெளியாகும் திரவ துளிகளில் இருந்து வரும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளி மட்டும் போதாது. முகக்கவசம், போதுமான காற்றோட்டம் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. காற்று பரவும் முறை மற்றும் பேசும் போதும் சுவாசிக்கும்போது எந்தளவுக்கு திரவ துளிகள் வெளிப்படுகிறது என்பதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!
1 முதல் 10 மைக்ரோ மீட்டர் அளவில் உள்ள மனித சுவாசத் துளிகள் எவ்வாறு கடக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அளவுள்ள துளிகள் கொரோனா வைரஸை கடத்துவது உறுதியாகியுள்ளது. எனவே கட்டிடங்களில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வெளியான வைரஸ் நிறைந்த துகள்கள் எவ்வாறு கடந்து செல்கிறது என்பது குறித்து ஆராய தொடங்கியுள்ளோம் என பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள ஜென் பிய் கூறியுள்ளார்.