சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு – இன்று தடுப்பூசி முகாம்!

0
சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு - இன்று தடுப்பூசி முகாம்!
சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு - இன்று தடுப்பூசி முகாம்!
சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு – இன்று தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி முகாம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி முகாம்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – கணக்கீடு இதோ!

அத்துடன் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 15 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் – பிரதமர் தகவல்!

இதையடுத்து சென்னையில் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_booster_camp/ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதில் தங்கள் பகுதிக்கு அருகே உள்ள முகாம்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!