அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் – பிரதமர் தகவல்!
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளில் தளர்வுகள்:
உலகின் பல்வேறு நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா பெருந்தொற்று இன்னும் பல அவதாரங்களை எடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது வேகமெடுத்து வருவதை தொடர்ந்து மீண்டும் கொரோனா தொற்றும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் உலகின் பல நாடுகளில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு – அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
அந்த வகையில் கொரோனா தொற்று பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஓமைக்ரான் தொற்று வேகமெடுக்க தொடங்கியதால் கடந்த 8ம் தேதி முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி மக்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் சான்றிதழ் விநியோகம்!
அதனை தொடர்ந்து இரவு நேர விடுதிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவசியமாக்கப்பட்டிருந்த கோவிட் பாஸ்கள் தேவையில்லை என்றும், கட்டாய தடுப்பூசி சான்றிதழ்களும் இனி தேவைப்படாது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்ட 90% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. அதனாலேயே இத்தகைய தளர்வு வழங்கப்படுவதாக கூறியுள்ளார். அதனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.