தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் சான்றிதழ் விநியோகம்!
தமிழகத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு துணைத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் செய்முறை தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
மதுரையில் நாளை (ஜன.21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி 10ம் வகுப்புக்கான துணைத்தேர்வு செப்டம்பர் 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அசல் மதிப்பெண் சான்றிதழை வழங்குவது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ரத்து – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் துணைத் தேர்வு எழுதி அதன் மூலமாக அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை நாளை (ஜன.21) முதல் வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு தற்போது தேர்வெழுதிய பாடத்திற்கான மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.