இனி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ‘இது’ கட்டாயம் – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!
நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டோருக்கு மட்டுமே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் கடை வாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மது விற்பனை:
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனால் வைரஸ் பரவலும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பு செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்வதன் நன்மை குறித்து சுகாதார அதிகாரிகள் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கடந்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தும் விதமாக இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்வோர் கவனத்திற்கு – 16,540 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்!
இதனை பார்த்த மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மது வாங்க வருவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் நாமக்கல்லில் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அவர்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கும் விதமாக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.