தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்வோர் கவனத்திற்கு – 16,540 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்!
தமிழகத்தில் இனி வரும் காலங்கள் முழுவதும் பண்டிகைக் காலம் என்பதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது அதிகமாக காணப்படும். எனவே தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
நாடு முழுவதும் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. பண்டிகை நாளன்று மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் விழாவை கொண்டாடுவது வழக்கம். தற்போது மாநில வாரியாக கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் – அக்.25 முதல் தொடக்கம்!
பண்டிகை நாளில் வெளியூரில் தங்கி பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாடுவது வழக்கம். தற்போதைய நிலவரப்படி பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வதன் மூலம் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்கும் என்பதால் மக்களின் நலனுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கவனத்திற்கு – அக்.15 கடைசி நாள்! அரசு உத்தரவு!
அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழகத்தில் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் நவம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வது கட்டுப்படுத்தப்பட்டு நோய் பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.