தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் எவ்வித முறைகேடுகளும் இன்றி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்து சமய அறநிலையத்துறை:
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 36,000 திருக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. தமிழகத்தில் தலைமையேற்றுள்ள திமுக அரசு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்கள் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இந்த வார TRP ரேட்டிங் – ‘கண்ணான கண்ணே’ சீரியல் முதலிடம், ரசிகர்கள் வாழ்த்து!
அவை பொதுமக்களின் பார்வைக்காக நிலங்களின் பட்டா, “அ” பதிவேடு போன்றவை திருக்கோயில் நிலங்கள் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கோயில் அர்ச்சகர்களால் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் அறநிலையத்துறையின் சார்பாக கோயில்களில் உணவு சமைத்து உணவின்றி சிரமப்படுபவர்களுக்கும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 39,097 பேருக்கு கொரோனா – 546 பேர் பலி!
அதனை தொடர்ந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு அனைத்து கோயில்களிலும் ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் புதிதாக 450 கோயில்கள் மறு சீரமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க ஏற்றவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் எவ்வித முறைகேடுகளும் இன்றி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிரப்பப்படும் என்று உறுதியளித்துள்ளார்.