இந்தியாவில் ஒரே நாளில் 39,097 பேருக்கு கொரோனா – 546 பேர் பலி!
கொரோனா 2 ஆம் அலை புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் நேற்று (ஜூலை 23) ஒரு நாளில் மட்டும் தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 39,097 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கையானது சற்று குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உலகமெங்கிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா பேரலையால் மனிதர்களின் அன்றாட வாழ்வு முடக்கப்பட்டது. தற்போதுள்ள தலைமுறை இதுவரை கண்டிராத அளவுக்கு உயிர் சேதத்தை இந்த 2 ஆண்டுகள் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு நாடும், இந்த நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகி பொதுமக்கள் பலர் இன்று வரை இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
TET தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
இந்த பாதிப்புகளை கடந்து வந்து, தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் நேற்று (ஜூலை 23) ஒரு நாள் மட்டும் 39,097 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 17 ஆயிரம் புதிய பாதிப்புகளுடன் 100 க்கும் மேற்பட்ட இழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tokyo Olympics 2021 – முதல் தங்கத்தை கைப்பற்றிய சீனா, நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா!
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு நாளில் 546 இறப்புகள் ஏற்பட்டுள்ளதால், மொத்த பலி எண்ணிக்கையானது 4,20,016 ஆக அதிகரித்துள்ளது. தவிர 3,05,03,166 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 4,08,977 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் இதுவரை 42,78,82,261 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.