தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 2022 – அமைச்சர் முக்கிய தகவல்!

0
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 2022 - அமைச்சர் முக்கிய தகவல்!தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 2022 - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 2022 - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 2022 – அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் குறைவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது . இதனை தொடர்ந்து தற்போது தரமான பொருட்களை விநியோகம் செய்ய ரேஷன் கடைகளில் உள்ள 4000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முக்கிய தகவல்:

தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவு பொருட்கள், ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு இடங்களில் அரிசி தரமற்றதாக உள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் கிடைத்துள்ளன. அதனால் இதை தடுக்க பல நடவடிக்கைகளை கூட்டுறவு துறை மேற்கொண்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் ஏராளமான ரேஷன் கடைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்னர் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறியதாவது, ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் அனுப்பப்படுவதை ஆய்வு செய்ய கூட்டுறவு துறை இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலர் உள்ளிட்டவர்களை கொண்ட ஆய்வு குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் பொதுத்தேர்வில் ஆசிரியர்கள் செய்த முறைகேடு – நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

இக்குழு ஆய்வு மேற்கொண்ட பிறகு ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தரமான அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட வழங்கல் அதிகாரி கண்காணிக்க வேண்டும். இதனை தொடர்ந்து 800 முதல் 3000 ரேஷன் கார்டுகள் கொண்ட கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!