மாநிலத்தில் பொதுத்தேர்வில் ஆசிரியர்கள் செய்த முறைகேடு – நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தேர்வு மையத்திற்கே விடைகள் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதன் பின்பு கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. மே 5 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் கடந்த மாதத்தில் இருந்து பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன்படி ,கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாகவும், மாணவர்கள் தேர்வு எழுதும் தேர்வு மையத்திற்கு விடைகள் அனுப்பப்படுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிகளில் உடனடியாக ஆய்வு செய்தனர். அந்த பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் மொபைல் போனிலும் கேள்விக்கான விடைத்தாள்களை வைத்திருந்ததாக கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட பசுமரு ஜில்லா பரிஷத் பள்ளியைச் சேர்ந்த 6 ஆசிரியர்களும், கனுமோலு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.