ஞாயிறு ஊரடங்கு இனி கிடையாது – உத்தரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு!
உத்தர பிரதேச மாநிலத்தில் இனி ஞாயிறு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
ஞாயிறு ஊரடங்கு:
நாடு முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மாநில வாரியாக பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப அரசுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இதையடுத்து மாநிலங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என்று அதிகாரத்தை வழங்கியது மத்திய அரசு.
பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – ஆகஸ்ட் 22 ல் வெளியீடு!
அந்த வழியிலே தற்போது உத்திர பிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அமலில் இருந்த முழு ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் இந்த வார இறுதி நாள் ஊரடங்கு என்பது ஆகஸ்ட் 11ம் தேதி மாநில அரசால் அமல்படுத்தப்பட்டு, வாரத்தின் கடைசி இரண்டு நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு இருந்தது.
CBSE தனித்தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!
இந்த உத்தரவை ஆகஸ்ட் 14-லிருந்து தளர்த்தி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடமாடலாம் என்ற உத்தரவை அமல்படுத்தியது. தற்போது இந்த மாநிலத்தில் தொற்று பரவல் என்பது குறைந்து உள்ளதாகவும் தினசரி பாதிப்பு 65 -ஆக மட்டுமே உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது. தற்போது மாநிலத்தில் நடப்பில் உள்ள COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 672 ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.