டிக் டாக் (Tik Tok) செயலி மீதான தடை நீக்கம் – அமெரிக்க அரசு அறிவிப்பு!
சீனாவின் தயாரிப்பான டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட பல செயலிகளுக்கு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்திருந்தது. தற்போது இந்த செயலிகளின் மீதுள்ள தடையை நீக்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
டிக் டாக் செயலி:
சீனாவில் தயாரிக்கப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட பல செயலிகள் உலக நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த நிலையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள், சீனாவின் செயலிகளை மக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. அந்த வகையில் இந்தியாவிலும் டிக் டாக், ஷேர் இட் உட்பட 59 சீன செயலிகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் இன்று – எங்கெல்லாம் தெரியும்?
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் ஜனநாய கட்சியின் தலைவர் ஜோ பைடன் அமெரிக்க நிர்வாகத்தில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவின் முந்தைய அரசின் நிர்வாகத்தில் தடை செய்யப்பட்டிருந்த பல பணிகளை அவர் மீண்டும் துவங்கியுள்ளார். அதன் படி பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து சீன செயலிகளான, டிக் டாக் மற்றும் வீ சாட் பயன்பாட்டிற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் படி புதிய பயனாளர்கள் அந்த 2 செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு எதிரான கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளார். அதே நேரத்தில் அவற்றின் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய புதிய வணிகத்துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.