தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பரிசுத் தொகையையும் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் பரிசு
வருகின்ற 2022ம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் இலவச பொங்கல் தொகுப்புகள் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த மாதம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.62 மதிப்புள்ள 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! ஓமைக்ரான் எதிரொலி!
இந்த பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் இலவச வேட்டி, சேலைகளும் ஜன.3ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத்தொகையும் அரசு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த பொங்கல் பண்டிகையின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும், பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 தொகை பரிசாக வழங்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். என்றாலும் இது குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிப்படவில்லை. இதற்கிடையில் ரேஷன் அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மாநில விவசாய தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற செயலாளர், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்