இரவு நேர ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! ஓமைக்ரான் எதிரொலி!

0
இரவு நேர ஊரடங்கு அமல் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! ஓமைக்ரான் எதிரொலி!
இரவு நேர ஊரடங்கு அமல் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! ஓமைக்ரான் எதிரொலி!
இரவு நேர ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! ஓமைக்ரான் எதிரொலி!

நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இரவு நேர ஊரடங்கு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உருமாறிய கொரோனா வகையாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று இடம் பெற்றுள்ளது. அதாவது ஏற்கனவே பரவிய ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் வரிசையில் தற்போது ஓமைக்ரான் தொற்று இடம்பெற்றுள்ளது. இந்த அவதாரங்களில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனா வகைகள் தீவிரமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

பொண்ணு தான் பிறக்கும்னு நினைச்சோம்’ – பாரதி கண்ணம்மா வில்லி பரினா ஓபன் டாக்!

ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் தொற்று டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகைகளை விட வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் பாதிப்புகளின் அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கர்நாடகா, குஜராத், இராஜஸ்தான், மஹாராஷ்டிரா, டில்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 220 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை (டிச.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனால் ஓமைக்ரான் தொற்றால் ஏற்பட உள்ள கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக பாதிப்புகள் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10% க்கு அதிகமாக பாதிப்பு இருக்கும் ஆக்சிஜன் அடங்கிய 40% படுக்கைகள் நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ள மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் மக்கள் கூடுவதை நெருமுறைப்படுத்தவும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!