கேக் வெட்டி கயல் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், தனம் மூர்த்தி அன்பை புரிந்து கொண்ட மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கேக் வெட்டி கயல் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், தனம் மூர்த்தி அன்பை புரிந்து கொண்ட மீனா - இன்றைய
கேக் வெட்டி கயல் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், தனம் மூர்த்தி அன்பை புரிந்து கொண்ட மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கேக் வெட்டி கயல் பிறந்தநாளை கொண்டாடிய குடும்பத்தினர், தனம் மூர்த்தி அன்பை புரிந்து கொண்ட மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில்,கண்ணன் ஐஸ்வர்யா கயலுக்கு பிறந்தநாள் பரிசு வாங்கி கொடுக்கின்றனர். பின் தனம் மூர்த்தி அன்பை பற்றி மீனா புரிந்து கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயல் பிறந்தநாளுக்கு கண்ணனும் கதிரும் வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லை பலூன் வாங்குனீங்களா என கதிரை கேட்க இல்லையே என சொல்கிறார். பின் சென்று வாங்கி கொண்டு வாருங்கள் என சொல்ல, ஐஸ்வர்யா பலூனை கொண்டு வந்து கொடுக்கிறார். எங்க ஊரில் என்னை தான் பலூன் ஊத கூப்பிடுவார்கள் என ஐஸ்வர்யா சொல்ல, அது பெரிய சிட்டி என முல்லை கலாய்கிறார்.

உங்க குன்னக்குடி மட்டும் சிட்டியா என ஐஸ்வர்யா சொல்ல, சும்மா சொன்னேன் அத்தை என முல்லையை கிண்டல் செய்கிறார். பின் மீனா ஜீவா கயலை கொஞ்சிக் கொண்டிருக்க, மீனா எதுவும் நீ உன் புள்ளைக்கு செய்ய மாட்டேங்குற அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. இப்பவே ஒரு வயது முடிந்துவிட்டது அப்பறம் 20 வருஷம் சீக்கரம் சென்றுவிடும் என சொல்கிறார். என் அப்பா அம்மா பார்த்தீங்களா கயலுக்கு நகை போயிருக்கார். ஆனால் உங்க அண்ணா அண்ணி ஒன்றும் செய்யவில்லை என சொல்கிறார்.

தாத்தா பெயரை கேட்டு லக்ஷ்மியை அழ வைக்கும் ஹேமா, கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து அனுதாபப்படும் பாரதி – இன்றைய எபிசோட்!

பின் தனம் வந்து கயலை தூங்க வைக்கலாம் அப்போது தான் சாயங்காலம் நன்றாக இருக்கும் என சொல்கிறார். பிறந்தநாள் விழாவிற்கு கயல் தயாராகி வர அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். தனத்தின் அண்ணன் வந்து பரிசு கொடுக்கிறார். ஜீவா கதிர் சென்று கேக் வாங்கி கொண்டு வருகிறார்கள் அப்போது தனம் கயலை தூக்கி வைத்திருப்பதால் மீனாவின் அம்மா வருத்தப்படுகிறார். தனம் மீனாவை அழைத்து கேக் வெட்ட சொல்ல, ஜீவா லட்சுமி அம்மா புகைப்படத்தை கொண்டு வந்து வைக்கிறார். அம்மா நம்ம கூடவே இருக்க வேண்டும் அதனால் தான் வைத்தேன் என ஜீவா சொல்கிறார்.

கேக் வெட்டி அனைவருக்கும் கொடுக்க, கண்ணன் ஐஸ்வர்யா பரிசு வாங்கி கொடுக்கின்றனர். தனம் மூர்த்தி நெக்லஸ் வாங்கி கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்து மீனா சந்தோசப்படுகிறார். மீனா உனக்கு பிடித்திருக்க என கேட்க என்னிடம் சொல்லவே இல்லை என மீனா சொல்கிறார். இப்போது தான் செய்து வந்தது என தனம் சொல்கிறார். கதிருக்கு முக்கியமான போன் வருவதாக கிளம்புகிறார். பின் போஸ்ட் ஆபிசில் இருந்து ஒருவர் வருகிறார். அவர் ஆர்டி ஓபன் பண்ணியாச்சு ஒரு லட்சம் போட்டாச்சு என சொல்ல, அது என்ன என்று தெரியாமல் அனைவரும் இருக்கின்றனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!

மூர்த்தி அது ஒன்றும் இல்லை கயலுக்கு ஒரு வயசு ஆகும் போது ஆர்டி திறந்து 20 வருசத்துக்கு போட்டிருக்கோம் என சொல்கிறார். அதை கேட்டு மீனா வருத்தப்படுகிறார். கயல் பெயரிலா என கேட்க ஆமாம் கயல் விழி பெயரில் தனம் மாசம் 5000 ரூபாய் ஆர்டி போட்டுருக்காங்க என சொல்ல மீனா தவறை உணர்ந்து இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!