தமிழக தனியார் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதியம் – அரசுக்கு வலியுறுத்தல்!!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவால் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் சூழலில் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
விரிவுரையாளர்களுக்கு ஊதியம்:
தமிழகத்தில் சுமார் மூன்று மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்பரவல் இரண்டாம் அலையாக உருவெடுத்து மக்களை மிக தீவிரமாக பாதித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலம் வகுப்பு மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து தலித் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் கருப்பையா அவர்கள் உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது, ஊரடங்கு காலத்தில் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 வழங்கப்பட்டு வருகிறது. அனால் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு பாதி ஊதியம் அல்லது ஊதியம் வழங்குவதே இல்லை.
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – பாரத் பயோடெக் சோதனை!!
இதனால் விரிவுரையாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அவர்களை காக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இந்த பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள ஊதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.