இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – பாரத் பயோடெக் சோதனை!!

0
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் சோதனை!!
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் சோதனை!!
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – பாரத் பயோடெக் சோதனை!!

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான உரிமையை பாரத் பயோ டெக் நிறுவனம் பெற்றுள்ளது. குழந்தைகளுக்குக்கான கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை இன்று பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி:

இந்தியாவில் பரவி வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றன. மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து மக்களை வெளியில் வரமால் தடுத்தன. தற்போது இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. இது கடந்த வருட பரவலை விட அதிக வீரியத்துடன் உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மாநில அரசுகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கும் கொரோனா பரவும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் உரிமையை பாரத் பயோடெக் நிறுவனம் மே 21ம் தேதி பெற்றது. கொரோனா இரண்டாம் அலை குழந்தைகளையும் தாக்கி வருகிறது. எனவே குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

தமிழகத்தில் 23% பேருக்கு கொரோனா தொற்று – சர்வே அறிக்கை!!

பீகார் மாநிலம் பாட்னாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சோதனை தொடங்கி உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இன்று பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனை வெற்றி அடைந்த பிறகு இந்த வருடத்தின் மூன்றாவது காலத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!