தமிழகத்தில் முதற்கட்டமாக தொடக்க பள்ளிகள் திறப்பு – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் முதற்கட்டமாக தொடக்க பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பல மாநிலங்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசித்து, பெற்றோர்கள் மற்றும ஆசிரியர்களின் கருத்துகளை கேட்ட பின்னர் முதல்வர் அவர்கள் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய மாநில தலைவர் அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப பள்ளி மாணவர்கள் இதனால் அதிகளவில் பாதிப்படைகின்றனர். கிராமப் புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்படாது.
ஆகஸ்ட் 3ம் தேதி பொது விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள பள்ளிகளை சுழற்சி முறையில் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே ICMR, உயர் நீதிமன்றம் உள்ளிட்டவை பள்ளிகளை திறப்பதற்கான முடிவெடுத்தால் முதற்கட்டமாக ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதனால் தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளை கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.