ஆகஸ்ட் 3ம் தேதி பொது விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினமான ஆகஸ்ட் 3 ஆம் தேதியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியான நாளைய தினம், தீரன் சின்னமலையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட இருப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, எண்ணெய் இலவசம் – புதுச்சேரி அரசு ஒப்புதல்!
அதன் படி நாளை (ஆகஸ்ட் 3) ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையின் போது அரசின் அலுவல்களை கவனிப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலம் போன்றவை மட்டும் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
சமையல் போட்டிக்கு தயாராகும் சந்தியா, உற்சாகப்படுத்தும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
மேலும் இந்த பொது விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் கொடுக்கப்படாததால் அந்நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அவை வழக்கம் போல செயல்பட முடியும். குறிப்பாக நாளை அளிக்கப்பட இருக்கும் விடுமுயை பொறுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் 14.08.2021 அன்று வேலை நாளாக ஈடுசெய்யப்படுவதாக அறிவித்து, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறைகள் குறிப்பிட்டுள்ளது.