மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் ESIC நிறுவனத்தில் காலியாக Nursing Officer பணிக்கான 1930 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (27.03.2024) முடிவடையவுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
UPSC ESIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பின் படி, Nursing Officer பணிக்கென 1930 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Nursing பாடப்பிரிவில் B.Sc அல்லது Diploma (GNM) படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்பதாரர்கள் 27.03.2024 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு Recruitment Test மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 07 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் தரப்படும்.
ICMR NIN நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://upsc.gov.in/ என்ற UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் Female / SC / ST / Persons with Benchmark Disability பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற அனைவரிடமும் ரூ.25/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (27.03.2024) மட்டுமே மிதமுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification & Application Link