தமிழகத்தில் 12, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றதால் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை ஏற்படாமல் இருக்கிறது.
மின்தடை
தமிழக அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் 12, 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கியது. அதனால் கடந்த மாதம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்படாமல் இருந்தது. எனவே மின்தடையும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது.
UPSC ESIC நிறுவனத்தில் 1930 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!
அவர்களுக்கும் விரைவில் தேர்வு முடிய இருக்கிறது. எனவே தேர்வுக்கு பின் அடிக்கடி மின்தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கோடை காலம் தொடங்கி இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாக இருக்கின்றனர். எனவே கோடை காலத்தை சமாளிக்க மின் தடை நேரத்தில் முன்னேற்பாடுகளை செய்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.