விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சரவணன் கைக்கு வந்த முக்கிய ஆதாரம்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதியை செல்வம் தான் கடத்தி வைத்திருந்தாலும் செல்வத்தை இன்னும் அனைவரும் நம்பி கொண்டிருக்கின்றனர். இன்றைய எபிசோடில் செல்வத்தின் பென்ட்ரைவ் ஒன்று சரவணனிற்கு கிடைக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் பார்வதியை காணாமல் குடும்பமே தவித்து வந்தாலும் செல்வம் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் செல்வம் பார்வதி மற்றும் கோவிலின் புகைப்படத்தையும் போனில் இருந்து பென்ட்ரைவிற்கு ஏற்றுகிறார். அந்த நேரம் பார்த்து சந்தியாவும், சரவணனும் வர செல்வம் பென்ட்ரைவை மறைத்து வைக்கிறார். இந்நிலையில் சரவணன் டெலிவரிக்கு பொருள்களை கொடுத்துவிட்டியா என கேட்க ஆனால் செல்வம் இப்போது போகிறேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
உடனே சரவணன் சந்தியாவை கடையில் இருக்க சொல்லிவிட்டு செல்வதை அழைத்து கொண்டு டெலிவரி கொடுக்க செல்கிறார். செல்வம் பென்ட்ரைவை கொடுக்க இருக்கும் நபரும் அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். அவரிடம் பென்டிரைவை கொடுக்க முயன்றோம், சரவணன் கூட இருந்ததால் கொடுக்க முடியாமல் போகிறது. ஒரு இடத்தில் போலீசார் வாகன பரிசோதனையில் இருக்க பதறி போன செல்வம் பென்ட்ரைவை சரவணன் பாக்கெட்டில் போட்டு விடுகிறார்.
சரவணனை பார்த்த போலீசார் நீங்க சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர் தான என சொல்லி சரவணனை சோதனை செய்யாமல் அனுப்பி விடுகிறார். பின் சரவணன் பாக்கெட்டில் இருந்து செல்வம் பென்ட்ரைவை எடுக்க முயற்சி செய்ய ஆனால் எடுக்க முடியவில்லை. டெலிவரி செய்து விட்டு பணத்தை எடுத்து வந்து சரவணன் பாக்கெட்டில் வைப்பது போல பென்ட்ரைவை எடுக்க முயற்சி செய்கிறார் செல்வம். ஆனால் சரவணன் பணத்தை கடையில் வைக்க சொல்கிறார். பென்ட்ரைவை எடுக்க செல்வத்தின் எல்லா முயற்சியும் வீணாகியது.
இந்நிலையில் சரவணன் எனக்கு வெளியில் வேலை இருக்கு நீ பஸ்ஸில் கடைக்குச் சென்று விடு என செல்வத்தை சொல்ல, என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுங்க என சரவணனிடம் சொல்கிறார். அப்போது முயற்சி செய்து பென்டிரைவை எடுக்க முடியவில்லை. பின் வீட்டில் சந்தியா எதையோ நினைத்துக் கொண்டிருக்க சரவணன் வந்து தண்ணீர் கேட்கிறார். அப்போது சந்தியா கொடுக்க தண்ணீர் கீழே கொட்டி விடுகிறது.
அப்போது சரவணன் மேட் எடுக்க வர கால் தவறி விடுகிறது. அதனால் சரவணன் பாக்கெட்டில் இருந்த சில்லறை மற்றும் பென்ட்ரைவ் கீழே விழுந்து கட்டில் அடியில் சென்று விடுகிறது. மறுபக்கம் செல்வம் பென்ட்ரைவை தொலைத்து விட்டதாக தன்னுடைய இயக்கத்தினரிடம் சொல்ல அவர்கள் செல்வத்தை கடுமையாக திட்டுகின்றனர். அதில் இருக்கும் ஆதாரங்களை யாராவது பார்த்தால் எல்லோருடைய கதையும் முடிந்து விடும் என கூறுகின்றனர். நாளைக்கு எப்படியாவது பென்டிரைவை வாங்கி வந்து கொடுத்து விடுகிறேன் என செல்வம் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.