‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகில் வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா மாற்றத்திற்கு பிறகு கதையில் ரசிகர்களை தக்க வைக்கும் படியாக பல்வேறு காட்சிகள் புதிதாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அகில் கையில் சேறுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றத்திற்கு பிறகும், தொடர் நல்ல ரீச்சை அடைந்துள்ளது. இதற்கு காரணம் கதையில் கதாபாத்திரங்கள் மாற்றத்தின் போது தொய்வு ஏற்பட்டு விடாமல் புதிய விறுவிறுப்பு ஏற்படுவதால் மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் தற்போது சீரியலில் வந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் இருவரும் சௌந்தர்யா வீட்டில் ஒன்றாக இருப்பது போல் உள்ளது. இதனால் கடந்த வாரத்தின் காட்சிகள் மிகவும் கலகலப்பாக சென்றது.
விஜய் டிவியில் விரைவில் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 – கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம்!
அதிலும், பாரதி வேறுவழியில்லாமல் நீதிமன்ற உத்தரவு படி கண்ணம்மா வீட்டில் இருக்கிறார். அங்கு, கண்ணம்மாவும், ஆட்டோ குமாரும் சேர்ந்து பாரதியை வெறுப்பேற்றுவது போல் உள்ள காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளிக்கு பாரதியும், கண்ணம்மாவும் ஆட்டோவில் வருவதை பார்த்த குழந்தைகளும் தோண்டி தோண்டி கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பாரதி குழம்பி நிற்கிறார். கண்ணம்மா தான் கார் ரிப்பேர் ஆகி விட்டதால் ஆட்டோவில் வந்தார் என்று கூறி சமாளிக்கிறார்.
தமிழகத்தில் நாளை (டிச.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்படி இறுகுணையில், தற்போது அகில் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கையில் சேறுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த லட்சிகள் விரைவில் தொடரில் வர இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் குழந்தைகள் சௌந்தர்யா வீட்டில் இருப்பதால், அவர்களுடன் சேர்ந்து அகில் விளையாடுவது போன்ற காட்சிகள் விரைவில் வரவுள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த காட்சிகள் சீரியலில் அப்படி வர உள்ளது என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.