தமிழகத்தில் நாளை (டிச.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதந்தோறும் குறிப்பிட்ட பகுதிகளில் முன்னறிவிப்புடன் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் நாளை (டிச.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் பல மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வந்தது. எனவே முறையாக மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மின்கசிவு, மின் கம்பங்கள் சாய்தல் உள்ளிட்ட விபத்துகளின் காரணமாக ஆபத்துகள் நிகழாத வண்ணம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மின்துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் நாளை கோவையின் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – சோமனூர், கருத்தம்பட்டி, சாமளாபுரம், கிருஷ்ணாபுரம், தொட்டிபாளையம், செந்தில் நகர், செகுடந்தாளி, பரமசிவம் பாளையம், ராமாச்சிபாளையம், எலச்சிபாளையம், ராயர்பாளையம், தண்ணீர் பந்தல், காளிபாளையம், அய்யம்பாளையம்.