ஜூன் 1 முதல் 61 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் ஜூன் 1ம் தேதி முதல் 61 மாவட்டங்களில் ஊரடங்கு முறையில் தளர்வுகளை அமல்படுத்துவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
தளர்வுகள் அறிவிப்பு:
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தலைமையில் மூத்த அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநிலத்தின் தொற்று பாதிப்பு குறைவுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 55 மாவட்டங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
மதுபான கடைகள் 3 நாட்களுக்கு திறப்பு – இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!
தற்போது, அவற்றுடன் சேர்த்து சோன்பத்ரா, தியோரியா, பாக்பத், பிரயாகராஜ், பிஜ்னூர் மற்றும் மொராதாபாத் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இங்கு தினசரி பாதிப்பு 600 க்கும் குறைவாக பதிவாகியுள்ளதே தளர்வுகளுக்கு காரணம். மொத்தம் இந்த 61 மாவட்டங்களிலும், கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து வெளியே உள்ள பகுதிகளில் ஜூன் 1ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி கடைகள் மற்றும் சந்தைகள் திறந்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மீரட், லக்னோ, சஹரன்பூர், வாரணாசி, காஜியாபாத், கோரக்பூர், முசாபர்நகர், பரேலி, கௌதம புத்த நகர், புலந்த்ஷஹர், ஜான்சி, லக்கிம்பூர்-கிரி, ஜான்பூர் மற்றும் காசிபூர் ஆகிய 14 மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் இல்லாமல் முழுமையாக இருக்கும் என்றும், மாநிலம் முழுவதும், இரவு ஊரடங்கு உத்தரவு, வார இறுதி கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.