தமிழகத்தில் ஜூன் 15 வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில முக்கிய சிறப்பு ரயில்கள் ஜூன் 15 ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள்:
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா காரணமாக ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் மாநில போக்குவரத்து சேவையான பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ரயில் மற்றும் விமான சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு காரணமாக ரயில்வே துறை முழுவதுமாக இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ரயில்வே கடும் நிதிச்சுமைக்கு உள்ளாகி வருகிறது.
ஜூன் 1 முதல் 61 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது அனைத்து பகுதிகளிலும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதனால் தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து வருகிறது. தற்போது அதேபோல் மேலும் சில ரயில்கள் ரத்து ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற ஜூன் 3, 5, 10, 12 ஆகிய தேதிகளில் கொச்சுவேலி-மங்களூரு ஜங்சன் இடையே ரயில்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மறுமார்கத்தில் மங்களூரு ஜங்சன்-கொச்சுவேலிக்கு இடையேயான ரயில்கள் வருகிற ஜூன் 4, 6, 11, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் நாளை முதல் 15ம் தேதி வரை கோழிக்கோடு-திருவனந்தபுரம் ரயில் இருமார்கத்திலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் வருகிற ஜூன் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னை சென்ட்ரல்-விஜயவாடா ரயில் இருமார்கத்திலும் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.