தமிழக அரசு அறநிலையத்துறையில் தேவையற்ற பணியிடங்கள் – ஆய்வுக் குழு அமைப்பு!
இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள தேவையற்ற பணியிடங்களை நீக்க, பணியிட எண்ணிக்கை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கூறியுள்ளார்.
அறநிலையத்துறை:
இந்து அறநிலையத்துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு கோயில்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கோயில்களின் நிர்வாக பணிகள், செயல்முறைகள் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை செய்யும் பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர், பல்லடத்தில் 14 மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கொரோனா காலம் என்பதால் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமய அறநிலையத்துறையில் உள்ள தேவையற்ற பணியிடங்களை நீக்க, பணியிட எண்ணிக்கை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL 2021: 46 பந்தில் 106 ரன்கள் விளாசல்! பயிற்சி போட்டியில் வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ்!
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில், புதிதாக ஏற்படுத்தப்பட வேண்டிய பணியிடங்கள், மற்றும் ஏற்கனவே உள்ள தேவையற்ற பணியிடங்களை நீக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாகவும், பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பணியிட எண்ணிக்கை ஆய்வுக்குழு அமைக்கப்படுவதாகவும் குமரகுருபரன் கூறியுள்ளார். எனவே திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழு 30 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.