திருப்பூர், பல்லடத்தில் 14 மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் உயர்கல்வி மாணவர்களான 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், தற்போது திருப்பூர், பல்லடத்தில் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலையின் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால், பள்ளிகள் திறக்க பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை நீண்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றது. பல மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.
IPL 2021 திருவிழா ஆரம்பம் – போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி!
தமிழக அரசு பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் அறிவித்து அதனை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் உள்ள 2 பள்ளிகளை சேர்ந்த 14 மாணவர்களுக்கு இன்று கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு – ஆய்வில் தகவல்!
திருப்பூர் சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 220 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதால் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றது.