தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வரி விலக்கு சலுகை உயர்வு! பட்ஜெட் அறிவிப்புகள்!
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட்
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இவர் மத்திய பட்ஜெட்டை 4வது முறையாக தாக்கல் செய்த முதல் பெண்மணி. இந்த மத்திய பட்ஜெட் இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுவதாக இருக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு துறைகளில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் – இணையமைச்சா் அறிவிப்பு!
மேலும் இதில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது குறித்த தகவலை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்தோபாத்யா தகவல் தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 14%ஐ என்.பி.எஸ் என்ற தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைத்து வருகிறது.
U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய விராட் கோஹ்லி! வைரலாகும் புகைப்படம்!
வரவு வைக்கப்படும் இந்த தொகைக்கு வரி விலக்கு சலுகையும் கிடைக்கிறது. ஆனால் மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10% மட்டுமே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகைக்கும் வரி விலக்கு சலுகை வழங்கப்படுகிறது. தற்போது இந்த பட்ஜெட்டில் மாநில அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு சலுகை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் உள்ளனர்.