மத்திய அரசு துறைகளில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் – இணையமைச்சா் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் மத்திய மாநில அரசு துறை பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்தெடுக்கபட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் பணியில் உள்ள ஊழியருக்கு பணி சுமையும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் அவ்வப்போது அரசு தளர்வுகளை அளித்து வந்த நிலையில் போட்டித்தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்தது.
U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய விராட் கோஹ்லி! வைரலாகும் புகைப்படம்!
ஊரடங்கிற்கு பிறகு மக்கள் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டனர். அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முன் வந்ததுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் சிவில் சர்வீஸ் (UPSC) போன்ற தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. தற்போது UPSC தேர்வுகளான IAS, IFS தேர்வுகளின் முதல் நிலை தேர்வு ஜூன் 5ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிப்.7ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை உத்தரவு!
மேலும் இதில் 2020- 2021 ஆம் ஆண்டில் 2,65,468 பணியாளர்கள் UPSC, SSC, போன்ற தேர்வு வாரியங்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பட்டது. தற்போது 2022 -23ம் ஆண்டில் யுபிஎஸ்சி பிரிவில் 485 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் குரூப் A, குரூப் B , குரூப் C ஆகிய பிரிவுகளில் 45,240,200 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவற்றை உரிய நேரத்தில் நிரப்புமாறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை பிறப்பித்து வருகிறது என்றும் மத்திய பணியாளர் துறை இணையமைச்சா் தெரிவித்துள்ளார்.