பிப்.7ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை உத்தரவு!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வந்த காரணத்தால் முன்னதாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது நோய் பரவல் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பிப்ரவரி 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று பாதிப்பானது நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த காரணத்தால் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் உடனடியாக நோய் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. இதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்களையும் மாணவர்களின் நலன் கருதி முன்னதாக மூடுவதற்கு உத்தரவிட்டது.
பிப்ரவரி 14 வரை இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஒடிசா மாநிலத்தில் கோவிட்-19 நிலைமை சீரடைந்து வருவதை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 7 முதல் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. பிப்ரவரி 14 முதல் 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் ஓமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரித்த நிலையில் தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு மீண்டும் பிப்.7 முதல் ஒரு மாதம் விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் உற்சாகம்!
மாநில தலைமைச் செயலாளர் சுரேஷ் சந்திர மொஹபத்ரா தற்போது பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசு அதிக அக்கறை செலுத்துவதாகவும், மாணவர்களின் நலன் கருதி, கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல், 8 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளின் பள்ளிகள் மற்றும் விடுதிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும். அனைத்து துறைகளும் அந்தந்த கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.